இராணுவத் தளபதியின் பாரியார் மஞ்சுளிகா அருணா விஜேசூரிய இவ்வாறு படையினருக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இராணுவத் தளபதிக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தின் சேவா வனிதா என்னும் மகளிர் பிரிவின் தலைவியாக மஞ்சுளிகா செயற்பட்டு வருகின்றார்.
தன்னிச்சையான முறையில் படைவீரர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் இடமாற்ற உத்தரவுகளை மஞ்சுளிகா பிறப்பித்து வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
படைவீரர்கள் மற்றும் உயரதிகாரிகளை மிகவும் இழிவான சொற்களினால் இராணுவத் தளபதியின் பாரியார் விழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படைமுகாம் ஒன்றுக்கு விஜயம் செய்யும் போது உயரதிகாரிகள் தங்களது மனைவிமாரை அழைத்துச் செல்ல வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்யத் தவறும் படையதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் குறித்த சிங்கள இணைய ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment